Tuesday 28 February 2017

விருந்து ம ரு ந்து




        இந்த உலகத்திலே மனசு நிறைவதும் வயிறு நிறைவதும் சாப்பாட்டில் மட்டும் தாங்க முடியும். அந்த சாப்பாடு ருசியா இருந்தால் நமக்கு தேவாமிர்தம் அதுவே ருசியில்லாமல் இருந்தால் ஆழகால விஷம் தாங்க.... சில பேர் பசிக்காக சாப்பிடுவாங்க இருக்காங்க நானெல்லாம் ருசிக்காக சாப்பிடுற ஆளுங்க. நான் நல்லா சமைப்பேன்னு சொல்ல மாட்டேன் ஆனால் நான் சமைச்சதே நல்லா இல்லன்னா சாப்பிட மாட்டேன்...

Sunday 12 February 2017

அடைக்கோழி

                          பகுதி (2)                                                                                                                                                       - தொடர்ச்சி

             இந்த மாதிரி பெண்களை ஏன் நான் அடிக்கடி சந்திக்கிறேன் என்று தெரியவில்லை. பிச்சை எடுக்கும் பாட்டி முதல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுவரை சும்மா பார்த்து சிரித்தால் போதும் அப்படியே ஆதி முதல் அந்தம் வரை என்னிடம் கொட்டி விடுகிறார்கள். நான் இவர்களிடம் கேட்டேனா இல்லையே பிறகு ஏன் என்னிடம் வந்து சொல்கிறார்கள் அவர்களைப்பார்த்து சிரித்தது ஒரு குற்றமா...? பஸ் பயணத்தில் இது போன்று நிறைய அனுபவம் உண்டு. எங்க ஆபிஸ்ல அறைய சுத்தம் செய்கிற ஒரு அம்மா இருக்கிறார்கள் நான் அவர்களை அக்கா என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் யாரும் இல்லாதபோது ரொம்ப நாளா உங்கிட்ட மனசு விட்டு பேசனும்னு தோனுச்சு பேசலாமா என்றார். நானும் சொல்லுங்கள் என்றேன். அவர் சிறு பிள்ளை முதல் திருமணம் முடித்து,  குழந்தை பெற்று அதை கஷ்டப்பட்டு படிக்க வைத்து அந்த மகளுக்கும் திருமணம் முடித்து குழந்தை பிறந்தது வரை ஒன்று விடாமல் சொன்னார். அதாவது ஒரு வேளை சோற்றுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் இப்ப எப்படி இருக்கிறேன் என்று அவர் மன ஆதங்கத்தை கொட்டினார். மேலும் சொன்னார் என்னுடைய கணவர் வேலை செய்கிறார் அதை வைத்துதான் என் பிள்ளைகளை பொறியியல் கல்லூரி வரை படிக்க வைத்து பதினைந்து சவரன் நகைப்போட்டு கல்யாணம் முடிச்சேன்னு நினைப்பாங்க ஆனால் அதுதான் இல்லை. என்னுடைய குழந்தைகள் பிறந்த பிறகு அவர் வேலைக்கு போவதையே விட்டுவிட்டார். வேற வழியில்லாமல் அப்பதான் முதல் முறையா வெளி உலகத்தை பார்க்கிறேன் குழந்தைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட அந்த ஆளால் முடியாத போது நாம் வீட்டில் உட்கார்ந்து எந்த பயனும் இல்லை என்று ஒரு கம்பெனியில் கூட்டுற வேலையில் சேர்ந்து என் பிள்ளைகளை படிக்க வைத்தேன் நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தேன். இதுவரை யாராவது உங்க வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கேட்டால் அவர் மெக்கானிக்கா இருக்கிறார் என்று சொல்கிறேன்.  அவர் மரியாதை இதுவரை காப்பாற்றி வருகிறேன். இதுவரைக்கும் அது யாருக்குமே தெரியாது ஆனால் உங்களை பார்த்ததும் உண்மையை சொல்லனும்னு என் மனசுக்கு தோணுச்சு இத்தனை வருடங்களாக அழுத்திய மனபாரம் தீரந்தது போல் இருக்குன்னு கண்ணீர் சிந்துகிறார். நான் திகைத்து போய் உட்கார்ந்து இருக்கிறேன் எனக்கும் துக்கம் தொண்டையயை அடைக்கிறது.

வழித்தவறி ஆடுகள்

         
                                       பகுதி- (1)


           இந்த கட்டுரையில் என் மனதை பாதித்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இந்த பதிவுகள் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் ஆனால் உண்மயை புரிந்து கொண்டால் போதும்.  உண்மை எப்போதுமே கசக்கும் ஏனெனில் அது நம்மை இனம் காட்டுகிறது என்பதால். சரி விஷயத்திற்கு வருகிறேன் நான் சிறுவயது முதல் இன்று பார்த்தவரை பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய சிறு கட்டுரை இது நடுநிலைமிக்க ஆண்கள், பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன்.

Friday 10 February 2017

தமிழ்நாட்டில் எது குற்றம்?

ஜெயலலிதாவை 75 நாட்கள் யாரையும் பார்க்கவிடாது வைத்திருந்தது குற்றமில்லை...