Saturday 16 December 2017

இலங்கை வானொலி அறிவிப்பாளர் நாகபூஷணி அவர்களுக்கு விருது

     



          இலங்கை வானொலியில் அன்றும் இன்றும் தனது குரலால் வானொலி கேட்கின்ற அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாளர் கவிதாயினி, இலக்கிய குயில் நாகபூஷணி அவர்கள். இவர் மலையக ராணியாக உலாவந்து கல்வியிலும் பட்டம் பெற்று அங்கேயே தனது தரத்தை உயர்த்தி வானொலி என்னும் கலை உலகத்தில் நுழைந்து படி படியாக முன்னேறி இன்று பல விருதுகளை பெற்று எல்லோரையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார். சிலர் நமக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என்று வருந்துகிறார்கள் ஆனால் இவருக்கோ விருதுகள் இவரைத் தேடி வருகிறது.

Saturday 9 December 2017

துடுப்பில்லா படகுகள்

                         - பகுதி - (3)


பெண்கள் எப்போதுமே சில தியாகங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது யரோ ஒருவருக்காக மட்டும் என்பது நிதர்சனம் சில பெண்கள் சில வி்ஷயங்களை செய்து விட்டு நம்மை அண்ணாந்து பார்க்க வைத்துவிடுவார்கள் அந்தவகையில் இன்று நான் பார்த்த சில வித்தியாசமான பெண்களை இங்கே பதிவிட போகிறேன் படியுங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் அதோடு கொஞ்சம் சோகமும் கலந்திருக்கும் எப்போதும் அதிக தித்திப்பு அதிக சுவை தறாது கொஞ்சம் உவப்பும் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா படித்துவிட்டு சொல்லுங்கள் எப்படி என்று.

Friday 24 November 2017

மனதால் இணைவோம்

நாம் வெள்ளைக்காரர்களை ஒரு கொடுரமானவர்களால்தான்
புத்தகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா ஆனால் இப்போது அவர்களை காணும் போது அவ்வாறு தெரியவில்லை நான் பார்த்தவரை அவர்கள் மென்மையான இளகிய மனம் படைத்தவர்களாதான் தெரிகிறார்கள். சென்னை அடையார், பெசன்ட் நகர் பக்கம் அதிக வெள்ளைக்கார்கள் வசிக்கிறார்கள் அவர்கள் விலங்குகள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பதை காணக் கூடியாதாக இருக்கிறது. நாய், பூனை, காகம் இவைகளுக்கு உணவு அளித்து கருணையோடு பார்த்துக்கொள்கிறார்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம் அவைகளை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கிறோம். அது மட்டுமல்ல அவர்கள் யாரோடும் பேசும் போது கவனித்து இருக்கின்றீர்கள் சிரித்த முகத்தோடே பேசுவார்கள் அட்ரஸ் கேட்பதாக இருந்தாலும் சரி வேறு விஷயங்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்களின் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் எப்படி இருக்கோம் என்று சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே புரியும்.

Tuesday 7 November 2017

காஞ்சி ஒரு சிறப்பு தரிசனம்

           நெடுநாட்களாக காஞ்சிபுரம் சென்று வரவேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. திருவாரூரில் பிறப்பதற்கும் காஞ்சியில் கால் வைப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்.. அதற்காக நான் செல்லவில்லை என்னப்பன் சிவபெருமானை தரிசிக்க சென்றேன்...

Monday 30 October 2017

மழைத் தோழி

நான்...
மழையில் நனைந்து செல்கிறேன்
என் மேல் விழுந்த மழைந்துளிகள்
உன் நினைவுகள் போல் மெல்ல
உருண்டு ஓடுகிறது..!

Saturday 23 September 2017

நீயும் நானும்

ஏனடி நீ என் மனதில்
இத்தனை ஆசைகளை
விதைத்து செல்கிறாய்..?
வறண்ட பூமியில்
தண்ணீருக்காக போராடும்
விவசாயி போல் - உன்
வருகைக்காக வழிமேல் விழிவைத்து
ஆசையோடு காத்திருக்கிறேன் நான்...!

Sunday 17 September 2017

கண்ணில் பதிந்த காட்சிகள்

வெள்ளிக்கிழமை வந்தாலே பேருந்து நிலையங்கள் எப்போதும் நிரம்பி வழியும். அது போல் ஒரு நாள் நான் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தேன்... நிரமாத கர்ப்பிணி கூட வேகமாக நடந்தய விடுவாள் ஆனால் இந்த பேருந்துக்கள் நகர முடியாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த நெடுஞ்சாலையில்.  அப்போது ஒரு தாய் இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏறினாள்...

Saturday 19 August 2017

மொரல் மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :-

மொரல் மீன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
புளி - 1 எழுமிச்சை அளவு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - சிறிது
பூண்டு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய்- தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

Friday 18 August 2017

பசலிகீரை சாம்பார்

தேவையான பொருட்கள் :-

பசலி கீரை - ஒரு கட்டு
பாசிப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் -5
உருளை கிழங்கு பெரியது - 1
கத்தரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் துறுவல் - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்

மீன் வறுவல்


தேவையான பொருட்கள் :-

மீன்  - 1/2 கிலோ
கடலை மாவு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
முட்டை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 3 பல்
கலர் பொடி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

Wednesday 9 August 2017

பிரட் ஆம்லேட்

தேவையான பொருட்கள்:

பிரட் - 4
முட்டை - 2
குடை மிளகாய் - 1 (கேப்சிகம்) பச்சை,சிகப்பு
வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிது
உப்பு - சிறிது

Saturday 22 July 2017

தக்ஷ்சினசித்ரா

 
         சமீபத்தில் ஒரு சனி கிழமை அன்று தக்ஷ்சின சித்ரா மியூசியம் போனேன் எங்க அலுவலகத்தில் இருந்து அழைத்து சென்றார்கள் சென்னை, முட்டுகாடுக்கு மிக அருகில் இருக்கிறது திருவான்மீயூரில் இருந்து சென்றால் ஹோல்டன் பீச், மாயாஜால் என வரிசையாக பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்கின்ற ஒரு வழி மாமல்லபுரத்திற்கும் அந்த வழியாக செல்லலாம் . முட்டுக்காடு என்ற பெரிய ஏரியும் அருகே இருக்கிறது.


Monday 17 July 2017

கனவே கலையாதே

            மாலை 5 மணி ரிங்....ரிங்... ரிங்... போன் அடித்துக்கொண்டே இருந்தது அம்மாவிடம் இருந்து போன்.  போனை எடுத்து காதில் வைத்து "என்னம்மா.." என்றேன்.

               மறுமுனையில் அம்மா "ம்மா.. நம்ம குட்டிமணிக்கு வெறிபுடிச்சிடுச்சும்மா.." என்று ஒரே அழுகை.

             "என்னம்மா சொல்றே.. அப்படி எதும் இருக்காது நீ ஏதாவது உளராதே.."

Monday 3 July 2017

ராமேஸ்வரம் ஒரு யாத்திரை

         


             ராமேஸ்வரம் போக வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதுவும் அமாவாசைக்கு சென்றால் விசேஷம் என்றார்கள் அதன் படி அமாவாசை அன்று மூட்டை கட்டியாச்சு... பட்டுக்கோட்டையில் இருந்து காலை 8 மணிக்கு பஸ் ஏறினோம்.. அந்த நேரத்தில் நேரடியாக பஸ் இல்லை ஒருத்தர் சொன்னார் ராம்நாடு போய் ராமேஸ்வரம் போங்க சீக்கிரம் போய்விடலாம் என்றார். சரியென்று அரை மனதாக பஸ்ஸில் கிளம்பியாச்சு... அன்று அப்படி ஒன்றும் வெயில் இல்லை இதமாகவே இருந்தது.

Saturday 1 July 2017

சித்தர்களும் பக்தர்களும்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

                                 - திருமூலர்

சித்தர்கள் பாடல் வழி சிருஷ்டியின் தத்துவத்தை அறியப் புகுமுன் சித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு நிலையினை அறிவோம்.

Friday 30 June 2017

இலங்கை வானொலியின் குரல்

               முன்பு இலங்கை வானொலி கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது, அதில் வானொலி மன்றங்கள் வேறு இருந்தது. ஒரு குரூப் வானொலியில் பாடல் கேட்டுவிட்டு நம்ம பெயர் வராதா என்று வானொலிக்கு அருகே காத்து கிடந்தவர்கள் ஏராளம். இந்த நாள் எந்த அறிவிப்பாளர் வருவார் என்று காத்து கிடந்தது ஒரு கூட்டம்..  இன்னும் சிலர் ஆக்கங்களை எழுதிவிட்டு நமது பிரதி இன்று வருமா என்று காத்து கிடந்தவர்கள் ஒரு பக்கம்.  தனது பிரதி ஒலிபரப்பானால் சந்தோஷமும் வரவில்லை என்றால் எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்கள் ஏராளம் ஏராளம்... 

Monday 26 June 2017

காரம்

விடுமுறை நாட்களில்
விதவிதமா சமைச்சு
அம்மாவுக்கு கொடுக்கையில்
எனக்காச்சும் இதெல்லாம்
கிடைக்குது சிலருக்கு
பழைய கஞ்சி கூட
கிடைக்குதுல்லன்னு அம்மா
சொல்கையில் ஆசையாய்
அள்ளி சாப்பிட்ட மீன் குழம்பு
தொண்டையில் சிக்கி
நறுக்கென்று குத்துகிறது
கண்களில் கழுக்கென்று
கண்ணீர்த்துளி கண்களை
துடைத்தப்படி சாப்பிடுகிறேன்
குழம்பில் காரம் கொஞ்சம்
அதிகம்தான் இல்ல..!

Monday 12 June 2017

தாய்மடி

பவுர்ணமி நிலா
பட்ட பகலாக எரிய
வட்ட வாசலில்
உற்றார் உறவினார்
ஊர்கதை பேச
அம்மா மடியில்
படுத்து பாதி கதை
கேட்டும் கேட்காமலும்
தூங்கிய காலம்
இனி வரப்போவதில்லை

Tuesday 30 May 2017

கிளி ஜோசியம்

     

          ஒரு நாள் நானும் இன்னொரு பொண்ணும் பீச்சுக்கு போகலாம்னு போனோம்.... நாங்க போகும் போது ஒரு நாலு மணி இருக்கும் ஆனால் சுள்ளென்று வெயில் இருந்தது. நிற்க கூட முடியவில்லை ஆனால் அங்கே இரண்டு ஜோடிகள் மற்றவர்கள் தங்களை பார்க்கிறார்கள் என்ற அறிவே இல்லாமல் நாய்கள் போல் பீச்சை அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்... எனக்கு சுள்ளென்ற கோவம் அந்த நாய்களை விரட்டிவிட்டு வர்றேன் என்று கிளம்பினேன். என் கூட வந்த பொண்ணு "வேணாக்கா... அந்த அசிங்கத்தை நீங்க ஏன் பார்க்குறீங்க விட்டுறுங்கக்கா... எல்லாரும் பார்த்துட்டுதான் போறாங்க நீங்க வாங்க நாம அந்த பக்கம் போவோம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனது..

Monday 29 May 2017

மாட்டு இறைச்சியும் மனித நேயமும்

               எப்பா பெருமைக்குரிய போராளிகளே... மோடியை எதிர்க்க மாட்டுக்கறி சாப்பிட்டுதான் எதிர்கனும்னு இல்ல... வேற நல்ல வழியிலும் எதிர்க்கலாம்...

சின்ன சின்ன ஆசையும் பசுமை புரட்சியும்

சிறுவயது முதல் எனக்கொரு ஆசை உண்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... வகுப்பு 1ல் இருந்து 5 வரை படிக்கின்ற காலத்தில் வீட்டிற்கு எதிரே இருக்கிற தோட்டத்தில் பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை விதையிட்டு நாளொரு வண்ணமாய் அதை ரசித்து ரசித்து ஆடு, கோழி தீண்டா வண்ணம் பாதுகாத்து பள்ளி முடிந்து வந்ததும் அது எப்படி இருக்கிறது என்று ஓடிச்சென்று பார்த்துவிட்டுதான் வீட்டுக்குள் செல்வது வழக்கம்....

Thursday 25 May 2017

முதுமையும் வறுமையும்

            நண்பியின் ஊரில் திருவிழா நான் வந்தே ஆகவேண்டும் என்று கட்டாய அழைப்பு வேறு வழியின்றி சென்றிருந்தேன்... அதாவது இந்த அன்பு என்ற பெயரில் கொல்வார்கள் தெரியுமா அந்த மாதிரி. என் நண்பியின் வீட்டிற்குள் சென்றேன் அவர் வாயெல்லாம் பல்லாக வந்து என்னை "குட்டிமா...." என கைகளைப் பிடித்து வரவேற்றார். என்னை குட்டிமா என்றுதான் அன்போடு அழைப்பார்.  அங்கே இருந்த கட்டிலில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அவரின் பிள்ளைகள் சித்தி... எப்படி இருக்கின்றீர்கள் என்று ஓடி வந்து விசாரித்தார்கள்.. அப்போது எனது அருகில் ஒரு அம்மா வாட்ட சாட்டமாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு தெனாவெட்டு,  திமிர் என்பார்களே அந்த மாதிரி.  எனது நண்பி அவரை கைட்டி "இவங்க தான் பாக்யத்தம்மாள் ... நீ இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு இருப்பே இவங்க நம்ம ஊர்தான் இப்ப திருச்சியில் வேலை செய்யுறாங்க இரண்டு பையன் ஒரு மகள் "என்று அறிமுகம் செய்தார். அந்தம்மா என்னைப் பார்த்து சாதாரணமா ஒரு புன்னைகை செய்தார் ஏனோ அவரின் புன்னகையில் ஒரு அலட்சியம் தெரிந்தது. அப்படியே என்னைப் பற்றி யும் சொன்னார் என் நண்பி "நீங்களும் ரேடியோவில் இவபேரை கேட்டு இருப்பிங்க இவளும் கவர்மென்ட் ஆபிஸ்லதான் வொர்க் பண்றா.. ஆனால் கல்யாணமே வேண்டாம்னு சொல்றா நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்திட்டேன் கேட்கவே மாட்டேங்கிறா.. நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்கம்மா " என்று சிரித்தப்படி என்னைப்பார்த்தார்.

Friday 19 May 2017

உனதன்பில் நான் தொலைந்தேன்

நட்பு என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் யாரும் மன நிம்மதியோடு இருக்க முடியாது.  வீட்டில் பிரச்சினை,  அலுவலகத்தில் பிரச்சினை,  செல்லும் இடங்களில் பிரச்சினை என்றால் நாம் ஆறுதல் தேடி செல்கின்ற ஒரு இடம் நட்பு. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கையோடு வசிப்பவரும் சரி. கணவன்,  குழந்தைகள் என்று வசிப்பவர்களும் சரி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் நாடி செல்வது நட்பிடம் மட்டுமே...

Tuesday 28 February 2017

விருந்து ம ரு ந்து




        இந்த உலகத்திலே மனசு நிறைவதும் வயிறு நிறைவதும் சாப்பாட்டில் மட்டும் தாங்க முடியும். அந்த சாப்பாடு ருசியா இருந்தால் நமக்கு தேவாமிர்தம் அதுவே ருசியில்லாமல் இருந்தால் ஆழகால விஷம் தாங்க.... சில பேர் பசிக்காக சாப்பிடுவாங்க இருக்காங்க நானெல்லாம் ருசிக்காக சாப்பிடுற ஆளுங்க. நான் நல்லா சமைப்பேன்னு சொல்ல மாட்டேன் ஆனால் நான் சமைச்சதே நல்லா இல்லன்னா சாப்பிட மாட்டேன்...

Sunday 12 February 2017

அடைக்கோழி

                          பகுதி (2)                                                                                                                                                       - தொடர்ச்சி

             இந்த மாதிரி பெண்களை ஏன் நான் அடிக்கடி சந்திக்கிறேன் என்று தெரியவில்லை. பிச்சை எடுக்கும் பாட்டி முதல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுவரை சும்மா பார்த்து சிரித்தால் போதும் அப்படியே ஆதி முதல் அந்தம் வரை என்னிடம் கொட்டி விடுகிறார்கள். நான் இவர்களிடம் கேட்டேனா இல்லையே பிறகு ஏன் என்னிடம் வந்து சொல்கிறார்கள் அவர்களைப்பார்த்து சிரித்தது ஒரு குற்றமா...? பஸ் பயணத்தில் இது போன்று நிறைய அனுபவம் உண்டு. எங்க ஆபிஸ்ல அறைய சுத்தம் செய்கிற ஒரு அம்மா இருக்கிறார்கள் நான் அவர்களை அக்கா என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் யாரும் இல்லாதபோது ரொம்ப நாளா உங்கிட்ட மனசு விட்டு பேசனும்னு தோனுச்சு பேசலாமா என்றார். நானும் சொல்லுங்கள் என்றேன். அவர் சிறு பிள்ளை முதல் திருமணம் முடித்து,  குழந்தை பெற்று அதை கஷ்டப்பட்டு படிக்க வைத்து அந்த மகளுக்கும் திருமணம் முடித்து குழந்தை பிறந்தது வரை ஒன்று விடாமல் சொன்னார். அதாவது ஒரு வேளை சோற்றுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் இப்ப எப்படி இருக்கிறேன் என்று அவர் மன ஆதங்கத்தை கொட்டினார். மேலும் சொன்னார் என்னுடைய கணவர் வேலை செய்கிறார் அதை வைத்துதான் என் பிள்ளைகளை பொறியியல் கல்லூரி வரை படிக்க வைத்து பதினைந்து சவரன் நகைப்போட்டு கல்யாணம் முடிச்சேன்னு நினைப்பாங்க ஆனால் அதுதான் இல்லை. என்னுடைய குழந்தைகள் பிறந்த பிறகு அவர் வேலைக்கு போவதையே விட்டுவிட்டார். வேற வழியில்லாமல் அப்பதான் முதல் முறையா வெளி உலகத்தை பார்க்கிறேன் குழந்தைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட அந்த ஆளால் முடியாத போது நாம் வீட்டில் உட்கார்ந்து எந்த பயனும் இல்லை என்று ஒரு கம்பெனியில் கூட்டுற வேலையில் சேர்ந்து என் பிள்ளைகளை படிக்க வைத்தேன் நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தேன். இதுவரை யாராவது உங்க வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கேட்டால் அவர் மெக்கானிக்கா இருக்கிறார் என்று சொல்கிறேன்.  அவர் மரியாதை இதுவரை காப்பாற்றி வருகிறேன். இதுவரைக்கும் அது யாருக்குமே தெரியாது ஆனால் உங்களை பார்த்ததும் உண்மையை சொல்லனும்னு என் மனசுக்கு தோணுச்சு இத்தனை வருடங்களாக அழுத்திய மனபாரம் தீரந்தது போல் இருக்குன்னு கண்ணீர் சிந்துகிறார். நான் திகைத்து போய் உட்கார்ந்து இருக்கிறேன் எனக்கும் துக்கம் தொண்டையயை அடைக்கிறது.

வழித்தவறி ஆடுகள்

         
                                       பகுதி- (1)


           இந்த கட்டுரையில் என் மனதை பாதித்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இந்த பதிவுகள் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் ஆனால் உண்மயை புரிந்து கொண்டால் போதும்.  உண்மை எப்போதுமே கசக்கும் ஏனெனில் அது நம்மை இனம் காட்டுகிறது என்பதால். சரி விஷயத்திற்கு வருகிறேன் நான் சிறுவயது முதல் இன்று பார்த்தவரை பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய சிறு கட்டுரை இது நடுநிலைமிக்க ஆண்கள், பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன்.

Friday 10 February 2017

தமிழ்நாட்டில் எது குற்றம்?

ஜெயலலிதாவை 75 நாட்கள் யாரையும் பார்க்கவிடாது வைத்திருந்தது குற்றமில்லை...

Friday 27 January 2017

கோக்கும் பெப்சியும் வேண்டா ம்

வணக்கம் நட்புக்களே....

           நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.

Sunday 22 January 2017

எது மிருகவதை...?

           


          அன்று இந்த காளை இல்லை என்றால் விவசாயம் இல்லை. மாட்டை ஏர்பூட்டி உழுதால் தான் நாற்று நட்டு, கதிர் அறுத்து நாமெல்லாம் உட்கார்ந்து சோறு திங்க முடியும்... அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று, நெல்லை சாக்கில் கட்டி அந்த காலத்தில் மாட்டு வண்டியில் தானே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்பட்டது அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று... 

Saturday 21 January 2017

பெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்

         ஒருநாளில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வாரமா நீடித்த பெருமை மத்திய அரசை சாரும்... மெரினாவில் நுழைந்த போது ஒரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம்... கும்பல் கும்பலாக இளைஞர்கள் ட்ரம்ஸ் வைத்து அடித்துக்கொண்டு கோசங்களை எழுப்பிக்கொண்டும், காவடி சுமந்து வருவதுபோல் மாடுகளை உருவாக்கி சுமந்து வந்த காட்சிகள் மெய்சிலிர்க்கிறது... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஊர் திருவிழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு... இதற்காக மோடிக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.

Thursday 19 January 2017

புதிய பாரதம் ....... Jallikkattu

           அன்று மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து முக்கூடழ் ஆனது, இன்றோ மெரினாவில் இளைஞர்கள் தங்கள் வீரத்தை பறை சாற்ற முக்கூடல் ஆனது சென்னை... ஜல்லிக்கட்டு வீரத்திற்கு அழகு என்ற போதும் தமிழ் உணர்வுகளுக்கு இளைஞர்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

Tuesday 3 January 2017

யாதுமாகி நின்றாள்

பா -  விதைக்கிறேன்...
அறுவடை செய்ய ஆளில்லாமலே!
சந்தம் - இசைக்கிறேன்...
யாசிக்க யாருமில்லாமலே!
நாண் - ஏற்றுகிறேன்...
இலக்கு தெரியாமலே - ஏனெனில்
நான் யாதுமறியாதவள்...
யாதுமாகி நின்றாள்!