என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Tuesday 28 April 2015
கொம்புத் தேன்
அன்னை தெரசாவைப் பார்த்து
சமூக சேவகியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!
சுவாமி விவேகானந்தரைப் பார்த்து
நல்ல ஆன்மீகவாதியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!
சமூக சேவகியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!
சுவாமி விவேகானந்தரைப் பார்த்து
நல்ல ஆன்மீகவாதியா வரவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்!
10. திருக்கோத்தும்பி
வண்டு
தேனை நாடிப் பூவிடம் செல்வது போல நாமும் ஈசனை நாடிச் செல்ல
வேண்டியவர்களாயிருக்கிறோம்,
பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மா ஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
செந்தாமரையில் இருக்கும் பிரம்மாவும், இந்திரனும், அழகு பொருந்திய சரஸ்வதியும், நாரணனும், சந்திரசூரிய அக்கினியாகிய பெருமை மிக்க சோதிகளும், தேவர்களும் சிவபெருமானை முழுதாய் அறிந்து கொண்டவர்களல்ல. அத்தகைய ரிடப வாகனனைப் போற்றி அரசவண்டே நீ ரீங்காரம் செய்வாயாக.
பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மா ஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
செந்தாமரையில் இருக்கும் பிரம்மாவும், இந்திரனும், அழகு பொருந்திய சரஸ்வதியும், நாரணனும், சந்திரசூரிய அக்கினியாகிய பெருமை மிக்க சோதிகளும், தேவர்களும் சிவபெருமானை முழுதாய் அறிந்து கொண்டவர்களல்ல. அத்தகைய ரிடப வாகனனைப் போற்றி அரசவண்டே நீ ரீங்காரம் செய்வாயாக.
Sunday 26 April 2015
திருப்பொற்சுண்ணம்
நறுமணப்
பொருள்கள் பலவற்றை உரலிலிட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். பொன்னிறமானது,
பொன்னும் சேர்க்கப்படுவது. காதலன் நீராடத் தேவைப்படும் மணப்பொடிகளைக்
காதலியும், தோழிகளும் இடிப்பது. அவனது புகழ்பாடிக் கொண்டே இடிப்பார்கள்.
முத்துநல் தாமம் பூமாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடு பல்லாண்டிசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
ஆடற் பொற்சுண்ணம் இடித்தும்நாமே
முத்துநல் தாமம் பூமாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடு பல்லாண்டிசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
ஆடற் பொற்சுண்ணம் இடித்தும்நாமே
Saturday 25 April 2015
திருவம்மானை
கேட்டாயோ
தோழிகிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டாமரைக் காட்டித் தன் கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான் கொண்டு ஆண்டவா பாடுதுங்காண்.
தோழியே ஒருவன் எனக்குச் செய்த மாயத்தைக் கேட்டாயோ? சித்திரங்கள் தீட்டிய மதிள் சூழ்ந்த திருப்பெருந்துறைப் பெருமான் எனக்குக் காட்டுவதற்கு அரியன காட்டினான். தன் திருவடிகளையும் காட்டினான். அருளாகிய தேன் காட்டினான், சிவபரம் பொருளைக் காண்பித்துத் தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டதை நாம் பாடுவோம்.
தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டாமரைக் காட்டித் தன் கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான் கொண்டு ஆண்டவா பாடுதுங்காண்.
தோழியே ஒருவன் எனக்குச் செய்த மாயத்தைக் கேட்டாயோ? சித்திரங்கள் தீட்டிய மதிள் சூழ்ந்த திருப்பெருந்துறைப் பெருமான் எனக்குக் காட்டுவதற்கு அரியன காட்டினான். தன் திருவடிகளையும் காட்டினான். அருளாகிய தேன் காட்டினான், சிவபரம் பொருளைக் காண்பித்துத் தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டதை நாம் பாடுவோம்.
Thursday 23 April 2015
தனுஷ் அடுத்த சூப்பர் ஸ்டாரா? பவர் ஸ்டாரா?
தனுஷ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர். இப்போது எங்கு பார்த்தாலும் இவரின் முகம்தான் தென்படுகிறது. இவர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனும், செல்வராகவனின் சகோதரரும் ஆவார். இவர் 18 வயதிலே சினிமாவுக்கு நடிக்க வந்தவர். 2002 ல் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படம் பெரிய சர்சைக்கு உள்ளானது. அதன்பிறகு 'காதல் கோண்டேன்' படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் பலரின் பாராட்டையும் பெற்றார். 'திருடா திருடி' படத்தில் மன்மத ராசா பாட்டின் மூலம் இளசுகளின் மனதில் இடத்தைப் பிடித்தார்.
Wednesday 22 April 2015
Sunday 19 April 2015
7.திருவெம்பாவை
நான்
இந்த திருவாசகத்தை வாசிக்கும் போது என்னைக் ரொம்ப கவர்ந்ததும், ஒரு தொடராக
பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்க வைத்ததும் 'திருவெம்பாவை' பகுதிதான் ஏனோ
என்னை வெகுவாக ஈர்த்தது. நீங்களும் வாசித்து பாருங்கள் பிடிக்கும். அதாவது
இலக்கியத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி நண்பர்கள் பேசிக்கொள்வது
என்பது சுவாரஸ்யமானவை.
இங்கேயும் தோழிகள் பேசிக்கொள்வது போல்தான் அமைந்திருக்கிறது அதவும் ரசிக்கும்படி இருக்கிறது. சரி வாருங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று சற்று காதுக்கொடுத்து கேட்போம்.
மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றார் பகவான். பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து கொள்வதற்குப் பாடப்பட்டது திருவெம்பாவை.
இங்கேயும் தோழிகள் பேசிக்கொள்வது போல்தான் அமைந்திருக்கிறது அதவும் ரசிக்கும்படி இருக்கிறது. சரி வாருங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று சற்று காதுக்கொடுத்து கேட்போம்.
மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்றார் பகவான். பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து கொள்வதற்குப் பாடப்பட்டது திருவெம்பாவை.
Saturday 18 April 2015
நீத்தல் விண்ணப்பம்
பெண்ணையும்,
பொன்னையும் நாடுகிறவர்கள், காமத்தை விரும்பி ஏற்கிறவர்களுக்கு
நோய்வாய்பட்டு இந்த உடல் அழிந்துவிடும் என்கிறார் மாணிக்கவாசகர்.
காருறு கண்ணியரைம்புல
னாற்றங் கரைமரமாய்
வேருறுவேனை விடுதிகண்
டாய் விளங்குந்திருவா
ரூருறை வாய்மன்னு முத்தர
கோசமங்கைக் கரசே
வாருறு பூண்முலையாள் பங்க
வென்னை வளர்ப்பவனே
ஆற்றங்கரையில் வளர்கின்ற மரம் வெள்ளத்தால் அழிந்து போகும் ஐம்புலன்களும் காமம் என்கிற பிணிவாய்பட்டு அழிந்துவிடும்(கரைபுரளும் வெள்ளம் அரிப்புண்டு பண்ணுவதுபோல் காமமும் அழிவை உண்டு பண்ணும்) அதனால் என்னை நல்வழிப்படுத்து இறைவா என்கிறார். அழிவு என்பது போகிக்கு மட்டுமல்ல அவனுடைய போகத்தில் பங்குபெற்ற புலன்களுக்குமுண்டு.
காருறு கண்ணியரைம்புல
னாற்றங் கரைமரமாய்
வேருறுவேனை விடுதிகண்
டாய் விளங்குந்திருவா
ரூருறை வாய்மன்னு முத்தர
கோசமங்கைக் கரசே
வாருறு பூண்முலையாள் பங்க
வென்னை வளர்ப்பவனே
ஆற்றங்கரையில் வளர்கின்ற மரம் வெள்ளத்தால் அழிந்து போகும் ஐம்புலன்களும் காமம் என்கிற பிணிவாய்பட்டு அழிந்துவிடும்(கரைபுரளும் வெள்ளம் அரிப்புண்டு பண்ணுவதுபோல் காமமும் அழிவை உண்டு பண்ணும்) அதனால் என்னை நல்வழிப்படுத்து இறைவா என்கிறார். அழிவு என்பது போகிக்கு மட்டுமல்ல அவனுடைய போகத்தில் பங்குபெற்ற புலன்களுக்குமுண்டு.
தஞ்சாவூர் சமையல்/கத்தரிக்காய் குருமா
தேவையான
பொருட்கள்:
கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - தேவையான அளவு
சோம்பு - சிறிது
பட்டை - சிறிது
கசகசா - சிறிது
சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - சிறிது
கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - தேவையான அளவு
சோம்பு - சிறிது
பட்டை - சிறிது
கசகசா - சிறிது
சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - சிறிது
5.திருச்சதகம்
இறைவனை
பக்தியோடு வணங்கினால் என்ன நிகழும் உடல் சிலிர்க்கும், கண்ணீர் பெருகும்,
தன்னையும் மீறி கையெடுத்து வணங்கும். இதைதான் மாணிக்கவாசகர் மெய்யுணர்தல்
என்கிறார்.
மெய்தானரும்பி விதிர் விதிர்த்
துன் விரையார் கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை
யாயெனைக் கண்டுகொள்ளே
உனது திருவடியை நாடுகின்ற எனது உடல் புளகித்து நடுநடுங்குகிறது. தலைமேல் கைகுவித்து உன்னை வணங்குகிறேன். என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன. உள்ளம் பக்திக் கனலால் வெதும்பும். பொய்மை தவிர்த்து மெய்ம்மை நிற்கும். என் நாவும் உன்னை வாழ்த்தும். தலைமேல் குவிக்கப்பட்ட கைகளோ தம்மை மறந்து குவித்த வண்ணமே இருக்கும்.
மெய்தானரும்பி விதிர் விதிர்த்
துன் விரையார் கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை
யாயெனைக் கண்டுகொள்ளே
உனது திருவடியை நாடுகின்ற எனது உடல் புளகித்து நடுநடுங்குகிறது. தலைமேல் கைகுவித்து உன்னை வணங்குகிறேன். என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன. உள்ளம் பக்திக் கனலால் வெதும்பும். பொய்மை தவிர்த்து மெய்ம்மை நிற்கும். என் நாவும் உன்னை வாழ்த்தும். தலைமேல் குவிக்கப்பட்ட கைகளோ தம்மை மறந்து குவித்த வண்ணமே இருக்கும்.
4. போற்றித் திருவகல்
கடவுள் இல்லை என்பர்கள் நாத்திகம் வாதம்
செய்வார்கள் அவர்களுக்கு என்ன சொல்கிறார் பாருங்கள் மாணிக்கவாசகர்.
'ஆத்த மானா ரயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்'
உற்றாரும், பக்கமுள்ளாரும் தங்கள் நாவில் தழும்பேறும் அளவுக்கு கடவுள் இல்லையென்கிற நாத்திக வாதம் பேசுகின்றனர். இதுவும் மாயை செய்கிற லீலைகளில் ஒன்று. மாயை என்றாலே மயக்குதான். அது கண்ணை மறைக்கும், அறிவை மயக்கும்.
'ஆத்த மானா ரயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்'
உற்றாரும், பக்கமுள்ளாரும் தங்கள் நாவில் தழும்பேறும் அளவுக்கு கடவுள் இல்லையென்கிற நாத்திக வாதம் பேசுகின்றனர். இதுவும் மாயை செய்கிற லீலைகளில் ஒன்று. மாயை என்றாலே மயக்குதான். அது கண்ணை மறைக்கும், அறிவை மயக்கும்.
3. திருவண்டப் பகுதி
'நீற்றோன்
காண்க நினைதொறு
நினைதொறு மாற்றோன் காண்க வந்தோ கெடுவேன்'
திருநீறு பூசியவனைக் கண்டு கொள்க. அவனை நினைக்குந்தோறும் அவனிடத்துப் பக்தி பெருகுகிறது. இன்ப உணர்வு மிகுகிறது. அவனை மறந்திருக்க என் மனம் சகியாது. ஒருவேளை அவனை மறந்தால் நான் கெட்டொழிவேன்,
நினைதொறு மாற்றோன் காண்க வந்தோ கெடுவேன்'
திருநீறு பூசியவனைக் கண்டு கொள்க. அவனை நினைக்குந்தோறும் அவனிடத்துப் பக்தி பெருகுகிறது. இன்ப உணர்வு மிகுகிறது. அவனை மறந்திருக்க என் மனம் சகியாது. ஒருவேளை அவனை மறந்தால் நான் கெட்டொழிவேன்,
Wednesday 15 April 2015
பிறந்த நாள் ... இன்று பிறந்த நாள்..!
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த வலைப்பூ ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடமாகிறது. இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கம் இந்த சமுதாயத்தின் மீதான மனக்குமறல்களை கொட்டுவதற்கும், நல்ல விஷயங்களை நாலு பேரோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த விஷயங்கள் அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆரம்பித்தேன்.
சில தகவல்களை இணையதளத்தில் தேடும் போது நாமும் இது போல் ஒன்று தொடங்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால் எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. (முதலில் ப்ளாக்கர் என்றாலே என்னவென்று தெரியாது எனக்கு மட்டுமல்ல பலருக்கு தெரியாது.) ஒரு நண்பர் வலைப்பூ ஆரம்பித்திருந்தார் அதன் பிறகு நான் ஆரம்பித்தேன் முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அப்புறம் போக போக புரிந்தது 140 பதிவுகளை இட்ட பிறகுதான் தமிழ்மணம் என்ற ஒரு வலைதிரட்டி இருக்கிறது என்று தெரிந்தது அதில் இணைந்த பிறகுதான் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அதன்பிறகுதான் ஹிட்ஸ் என்றால் என்னவென்று தெரியவந்தது.
பெண்ணே... பெண்ணே...
பெண்ணே...
உன்னை கடவுள் என்றார்கள்
ஏன் தெரியுமா? உன்னை
கையெடுத்து கும்பிட அல்ல
உன் கற்பை சூரையாடும் போது நீ
கற்சிலையாக இருக்க வேண்டும்
என்பதற்காக..!
பெண்ணே...
உன்னை நதி என்றார்கள்
ஏன் தெரியுமா? நீ
சுயநலமில்லாமல் உழைக்கிறாய்
என்பதற்காக அல்ல,
உன்னை 'மது' பானமாய்
அருந்துவதற்கு..!
உன்னை கடவுள் என்றார்கள்
ஏன் தெரியுமா? உன்னை
கையெடுத்து கும்பிட அல்ல
உன் கற்பை சூரையாடும் போது நீ
கற்சிலையாக இருக்க வேண்டும்
என்பதற்காக..!
பெண்ணே...
உன்னை நதி என்றார்கள்
ஏன் தெரியுமா? நீ
சுயநலமில்லாமல் உழைக்கிறாய்
என்பதற்காக அல்ல,
உன்னை 'மது' பானமாய்
அருந்துவதற்கு..!
Monday 13 April 2015
கீர்த்தித் திருவகவல்
பழமை வாய்ந்த புண்ணியத் தலமான
சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜன் உயிர்கள் அனைத்திலும் இனிதே இடம்
பெற்றிருக்கிறான்.
எங்கே பக்தியிருக்கிறதோ அங்கே இறைவன் விரும்பிக் குடிகொள்கிறான். பாவங்களைப் போக்கி யருள பூவலம் என்னும் ஊரில் நீ காட்சியளித்த பெருமை உண்டு.
எங்கே பக்தியிருக்கிறதோ அங்கே இறைவன் விரும்பிக் குடிகொள்கிறான். பாவங்களைப் போக்கி யருள பூவலம் என்னும் ஊரில் நீ காட்சியளித்த பெருமை உண்டு.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாட்டுக்கு
கோட்டையாக விளங்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்த நாள்
இன்று 13.4.1930 எங்க ஊர் கவிஞர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம். எங்க
ஊரிலிருந்து 3 கிமீ தொலைவிலே உள்ளது செங்கப்படுத்தான்காடு கிராமம் தஞ்சை
மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு கிராமத்தில்
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 15 வது வயதில்
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே
கரை ஓரத்தில் மேயாதே கெண்டை குஞ்சே
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு
ரொம்ப துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே
கரை ஓரத்தில் மேயாதே கெண்டை குஞ்சே
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு
ரொம்ப துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
Friday 10 April 2015
தஞ்சாவூர் சமையல்/புடலங்காய் பொறியல்
தேவையான
பொருட்கள்:
புடலங்காய் - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கடுகு உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துறுவல்- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
புடலங்காய் - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கடுகு உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துறுவல்- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
Wednesday 8 April 2015
தஞ்சாவூர் சமையல்/ மணத்தக்காளி வத்தக்குழம்பு
தேவையான
பொருட்கள்:
மணத்தக்காளி வத்தல் - 1 கையளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
மல்லித்தூள் - 1 கரண்டி
பெருங்காயம் - சிறதளவு
சக்கரை - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
மணத்தக்காளி வத்தல் - 1 கையளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 3/4 கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
மல்லித்தூள் - 1 கரண்டி
பெருங்காயம் - சிறதளவு
சக்கரை - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
Tuesday 7 April 2015
திருவாசகம்
'பரந்து
கிடக்கின்ற அண்டமானதால் பரம்பொருள் என்றும், கடந்து நிற்பதால் கடவுள்
என்றும் குறிக்கப்பெற்றவன். அவனை அருவமானவன் என்பார்கள். ஆனால் லட்சோப
லட்சத் தாரகைகள் மூலம் தன்னுடைய இருப்பை அவன் வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறான். கோடான கோடி உயிரனங்கள் பொருந்திக் கிடக்கிற உலகில் ஒரு
சீர்த்தன்மை காணப்படுகிறது. வினையின் விளைவாய் உடலெடுத்து ஐம்பொறிகளின்
கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கிடக்கிற நான் அகிலத்து நாயகனை எப்படி அறிந்து
போற்றுவது?
விஜய் படத்தின் கத்தி பாடல்கள்
விஜய்
படம் என்றால் பாடலுக்கும், நடனத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும்.
இது எல்லோரும் அறிந்ததே ஆனால் சமீபத்தில் வந்த கத்தி படத்தில் எந்த
பாடலும் நன்றாக இல்லை என்பதே உண்மை. எனக்கு விஜய் படத்தில் உள்ள பாடல்கள்
அனைத்தும் பிடிக்கும். கத்தி படத்தில் நிறைய சொதப்பல்கள். ஒரு சில
பாடல்களை கேட்டேன் என்ன பாடல்கள் இப்படி இருக்கிறது என நினைக்க வைத்தது.
"ஷெல்பிக்குள்ள" பாடல் மட்டும் சிலர் முணுமுணுத்தார்கள் மற்ற பாடல்கள்
எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
Monday 6 April 2015
திருவாசகம்/ ஆன்மீகம்
எனக்கு
திருவாசகம் படிக்க இப்போதுதான் வாய்த்திருக்கிறது. ஒரு பிரதோஷ நாளில் இந்த
புத்தகம் என் கண்ணில் பட்டது ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. எடுத்துப்
படிக்கத் தொடங்கினேன் ஒரு 5,6 பக்கங்களை கடந்திருப்பேன் என் கண்களில்
இருந்து கண்ணீர் கசிந்து உருகியது "திருவாசகத்திற்கு உருகார் ஒரு
வாசகத்திற்கு உருகார்" என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் நான் அதை
இப்போது உணர்ந்தேன். இதைப் படிக்கும்போது ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன் படிக்க படிக்க சிறு கட்டுரையாக போட முடியாது அப்படி எழதினால் முழுமையாகாது திருப்தி கிடைக்காது என்று தோன்றியது அதனால் ஒரு தொடராக எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
ஒருவர் கடவுளின் மீது இத்தனை காதல் வைத்திருக்க முடியுமா? இத்தனைப் பக்தி வைத்திருக்க முடியுமா? முடிந்திருக்கிறது அதனால்தான் தெய்வ மாந்தராக திகழ்கிறார் மாணிக்கவாசகர்.
ஒருவர் கடவுளின் மீது இத்தனை காதல் வைத்திருக்க முடியுமா? இத்தனைப் பக்தி வைத்திருக்க முடியுமா? முடிந்திருக்கிறது அதனால்தான் தெய்வ மாந்தராக திகழ்கிறார் மாணிக்கவாசகர்.
Thursday 2 April 2015
தஞ்சாவூர் சமையல்/வாழைக்காய் வறுவல் (பிரைய்)
தேவையான
பொருட்கள்:
வாழைக்காய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறுதுண்டு
கலர்பொடி - சிறிது
உப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வாழைக்காய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறுதுண்டு
கலர்பொடி - சிறிது
உப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நான் கடவுள் / ஒருபக்க கதை
காரைக்குடி
பேருந்து நிலையம் அரியக்குடி பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக பஸ்க்கு
காத்திருந்தேன். அருகில் என் தோழியின் மகள் கடைகளைச் சுற்றி வேடிக்கைப்
பார்த்துக்கொண்டு நின்றாள். தோழி தனக்குத் தெரிந்த ஒருவருடன் நலம்
விசாரித்து பேசிக்கொண்டிருந்தாள்.
அப்போது என்னருகில் ஒரு குரல் திரும்பிப் பார்த்தேன் அழுக்கு சேலையும், பரட்டை தலையும், முகத்தில் அதிக சுருங்கங்களோடு வயது முதிர்ந்த பாட்டி "அம்மா... தர்மம் பண்ணுங்கம்மா... மயக்கமா வருதும்மா... காபித்தண்ணி குடிக்க காசுயிருந்தா குடுங்கம்மா..." என்றார். என் தோழியின் மகள் முகத்தை சுழித்து வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
அப்போது என்னருகில் ஒரு குரல் திரும்பிப் பார்த்தேன் அழுக்கு சேலையும், பரட்டை தலையும், முகத்தில் அதிக சுருங்கங்களோடு வயது முதிர்ந்த பாட்டி "அம்மா... தர்மம் பண்ணுங்கம்மா... மயக்கமா வருதும்மா... காபித்தண்ணி குடிக்க காசுயிருந்தா குடுங்கம்மா..." என்றார். என் தோழியின் மகள் முகத்தை சுழித்து வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
Subscribe to:
Posts (Atom)