Tuesday 30 December 2014

அறியப்படாத ரகசியங்கள்

ஜீவன் எப்படி உடலை விடுகிறது?

             பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன், மல வழியில் அபாநன்,தொப்புளில் ஸமாநன், கழுத்தில் உதானன், சரீரமெங்கும் வயாநன் தங்கியிருக்கிறான். ப்ராணன் போவதற்கு முன் வ்யாநன் ரத்தத்திலிருந்து திரும்பி ப்ராணனிடம் வருகிறான். ரத்தம் சுண்டுவதால் அப்போது தான் மரண வலி ஏற்படும். அபாநன் ஸமானன் இவர்களும் இங்கு வந்து சேரும்போது ஜீரணம், மலஜலம் நின்று விடும். ஒரு வீட்டை ஒழித்துக் கொண்டு வேறு வீடு செல்வோர் எப்படி எல்லா சாமான்களையும் நடுவீட்டில் கொண்டு வந்து வைப்பார்களோ அப்படி எல்லாம் இருதயத்தில் வந்து தங்கும் பின்னர் வெளியேறும.
தீட்டு அகற்றுதல்:

            பசுவின் ஐந்து பொருள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம் எனப்படும். பிரசவ தீட்டு முடிந்தவுடன் பெண்கள் இதை சாப்பிட்ட பின்பே குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டும்.
கோமூத்ரம் 1 பலம்
கட்டை விரல் அளவு சாணம் 1
பால் - 7 பலம்
தயிர் - 3 பலம்
நெய் - 1 பலம்
நீர் - 1 பலம்
இவைகள் சேர்ந்ததே பஞ்சகவ்யம் எனப்படும்.

பஞ்ச கவ்யத்தை சாப்பிடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

"யத் த்வக் அஸ்திகம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே!
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹது அக்னிரிவ இந்தனம்!!

          எனது உடலில் தோல், எலும்பு இவைகளை அண்டி எனது உடலில் உள்ள பாவத்தை தீ கட்டையை எரிப்பது போல் பஞ்சகவ்யம் அகற்றட்டும்.

காக சாஸ்திரம்:

         முன்னோர்களுக்கு திதி செய்த பின், காக்கைக்கு சோறு வைப்போம் அல்லவா அதன் பலன்.

         காகம் கிழக்கு முகமாக பிண்டத்தை எடுத்தால் செல்வம் உண்டாகும். தென்புறம் எடுத்தால் நோய்வரும். மேற்கு புறம் எடுத்தால் முக்கிய காரியமாக வெளியூர் செல்வோம்.

        வடபுறமாக எடுத்தால் ஆயுள் விருத்தியாகும்.

       பிண்டத்தை எடுக்காமலே இருந்தால் குடும்பத்தின் மரணம் ஏற்படும்.

2 comments:

  1. Beef fry Saapittal udambil kadumaiyaana balam peralaam adhai viduthu maattin kazhivu galaal balam kidaikkum enbadhil enakku udanpaadu illai sagodhariye

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்
      சொல்வது மாமிசம் சகோதரரே அது வேறு இது வேறு. இதில் குறிப்பிட்டவை மாட்டில்
      இருந்துதான் கிடைக்கிறது ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனி. அதில் சில மருத்துவ
      குணங்களும் உள்ளது. கோதுமையில் இருந்து 7 வகையான உணவு பொருட்கள்
      தயாரிக்கப்படுகிறது. அவை தனித்தனியாக பிரிக்கும்போது வெவ்வேறு சுவையும்,
      வெவ்வேறு உணவும் தயாரிக்கலாம். அதற்காக முழு கோதுமையை நாம்
      சாப்பிடுவதில்லை. இப்படிதான் எல்லாமே அதை நாம்தான் புரிந்துகொள்வதில்லை.

      Delete