Friday 19 December 2014

சூடான செய்தி

           நான் சொல்லப் போற செய்தியைக் கேட்டு கதறி அழவோ, முட்டி மோதி கத்தி கூச்சல் போடவோ கூடாது. எல்லோரும் மனச திடமா வச்சுகோங்க.

           அது வேற ஒன்னுமில்ல நம்ம நாசா விஞ்ஞானிகள் நிலவுக்கு தண்ணீர் இருக்கான்னு பார்க்க போனங்கல்ல, அப்ப அங்க ஒரு மனித உடல் கிடந்திருக்கு. விஞ்ஞானிகளுக்கு ஒரே குழப்பமா போச்சு.


          அப்புறம் மண்டையை கசக்கி யோசித்ததில ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு. அந்த மனித உடல் வேற யாருமில்ல "நிலவில் வடை சுட்ட பாட்டிதான். "அது இறந்து 2 நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிறதாம். இந்த செய்தியை கேட்டதிலிருந்து மனசே சரியில்லை.

          "ஐயோ... வடை போச்சே..!"

          "என்ன எல்லாரும் குறுகுறுன்னு பார்க்குறீங்க? அட டென்ஷனகாதிங்க விடுங்க இத நான் சொல்லல வாட்ஸ் அப்ல இப்ப இந்த நீயூஸ்தான் பரப்பி விட்டுட்டு இருக்காய்ங்க... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல".

          அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

"இப்படி மொரச்சு பார்த்தே பீதிய கிளப்புறாங்கப்பா..!"

No comments:

Post a Comment