Friday 7 November 2014

கீதை

                   கீதை (பகுதி-1)

       கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.

      கீதை எங்கிருக்கிறோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன

      எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது.

      எங்கு கீதை கற்கப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ அங்கு நான் வாசம் செய்கிறேன்.

                                  (ஸ்ரீ கீதா மகாத்மியம்)
       
              இது பகவானின் வாக்கு

       பரமாத்மா கண்ணனைவிட சிறந்த ஞானியும் இருக்க முடியாது. பகவத் கீதையைவிட சிறந்த நீதி நூலும் இருக்க முடியாது.

        கண்ணனைத் துதிக்க முடிந்தவரும் கீதையைப் படிக்க முடிந்தவரும் பாக்கியவான்கள். 

                கீதை பிறந்த கதை

        மகாபாரதப் பாண்டவர்களுக்கும, கௌரவர்களுக்கும் சமாதானம் ஏற்பட வகையில்லை. பாண்டவர்க்குரிய நாட்டை சூதில் அபகரித்த துரியோதனாதியர் ஐவரின் சொத்துக்களில் ஐந்தே ஐந்து வீடுகளைக் கூட அவர்களுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

        கண்ணனின் தூது தோல்வி கண்டது அவன் துவாரகைக்குத் திரும்பிவிட்டான்.

                                                  - தொடரும்

No comments:

Post a Comment