Wednesday 12 November 2014

கீதை-7

                        கீதையின் சிறப்பு
         வேதங்களின் பொருளை கீதையில் காணலாம். அனைத்து உபநிடதங்களின் சாரமும் கீதையில் வாழ்வின் நெறிகளை முற்றாக உரைப்பது, சராசரி மனிதனுக்கும் பயன்படும, ஆன்மிக சாதகனுக்கும் பயன்படும். பக்குவங்கள் அனைத்தும் கொண்டது. இதில் சொல்லப்படாத தத்துவமே இல்லை.
 
            உடல், மனம், ஆன்மா சம்பந்தப்பட்டது யோகம். கீதை ஒரு யோக சாஸ்திரம்.

            பதினெட்டு யோகங்களை பதினெட்டு அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் வியாசர். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பிரதானமாய் அறியப்படும் நான்கு யோகங்களே இவ்விதம் விரித்துரைக்கப்படிருக்கிறது. கர்மத்தில் இருந்து ஞானம் இது மனித மனம் அடைகின்ற பரிமாணங்கள்.

         யோகம் என்பது என்ன? செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது.

       ஆத்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் விரவி நிற்கிறது. ஆத்மாவின் சொரூபம் கீதை.

        பரம்பரை தொட்டு, செவிவழி கேட்டுக் காப்பாற்றி வைத்த விஷயம் சுருதி எனப்படும். சொல்லும் பொருளும் மாறாதிருக்கும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட்ட விஷயம் ஸ்மிருதி எனப்படும். சமூக வாழ்வு சம்பந்தமான கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இதில் சொல்லப்படிருக்கும். இது காலத்துக்கேற்ப மாறும். காலம், இடம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது மேலோரால் திருத்தி அமைக்கப்படும்.

                                             -தொடரும்

No comments:

Post a Comment