Tuesday 11 November 2014

கீதை-5

            பாண்டவர் ஐவரிலும் அர்ச்சுனனுடன் நெருங்கிய உறவு கண்ணனுக்கு. பாலப்பருவத்தில் இருந்து, திருமணப் பருவம் வரை, வில்வித்தையில் இருந்து போர்க்களம் வரை எல்லா நிலைகளிலும் அர்ச்சுனனின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறான் கண்ணன். அப்படித்தான் உலக மாந்தர் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். ஜீவாத்மா பரமாத்மா தொடர்பே அர்ச்சுனன் கண்ணன் தொடர்பின் மூலம் விளக்கம் பெறுகிறது.

        கீதை உபதேசம் ஏன் அர்ச்சுனனுக்குச் செய்யப்பட்டது? பாண்டவரில் முக்கியத்துவம் பெற்ற மூவர் தர்மர், அர்ச்சுனன், பீமன் ஆவர்.

        தர்மர் சகல சாஸ்த்திரங்களையும், தர்மங்களையும் கற்றவர். அவருக்கு உபதேசம் தேவைப்பட்டது. பீமன் முரடன் முடர்கள் நீதி நியாயங்களைக் கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களில்லை. எனவே, கண்ணனின் உபதேசம் அர்ச்சுனனுக்கு செய்யப்பட்டது. மாமனிதன் தர்மர் மனிதனுக்கொவ்வாத விலங்கு குணம் படைத்தவன் பீமன். எனவே மனிதனான அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பாமர மக்களின் ஏகபிரதிநிதியாய் அவன் அந்த நல்லுரைகளைக் கேட்டுக் கொண்டான்.

No comments:

Post a Comment