Sunday 16 November 2014

கீதை -10

          நாம் மூழ்கி எடுக்கின்ற ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்கள்! புதுப்புது பொருள்கள்!

        சொல் புதிது, பொருள் புதிது என்பதோடு அதன் சுவையும் புதிதுதான் சுவைக்கின்ற ஒவ்வொரு முறையும்.

        கீதையின் ஒவ்வொரு வரியும் ஒரு நன்னெறியைச் சொல்கிறது. இது பகவானுடைய விஷயம். இதில் விஞ்சி நிற்பது சொல்லா, பொருளா, சுவையா என்று நாம் ஆராயக் கூடாது.

       கீதை வாசிப்பு வியாசர் இப்படிக் கூறுவார்:

        'கீதா ஸுகீதா கர்தவ்யாகி மந்யை
         காஸ்த்ர ஸங்கிரஹை!
         யா ஸ்வயம் பத்மநாபஸ்ய
        முக பத் மாத் விநி : ஸ்ருதா' என்று.

         கீதையை நல்லவிதமாய் கேட்கவும், பாடவும் செய்ய வேண்டும். படிக்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். மனதில் பதிக்க வேண்டும். பகவான் பத்நாபரின் முகக் கமலத்திலிருந்து வெளிப்பட்டது.

 நாம் கீதையை ஓதி உணர்ந்தபின் வேறெந்த நூலும் அவசியப்படாது. கங்கையில் மூழ்கியெழுந்தவன் தன்னைத்தான் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். தனக்கு மட்டுமே அனுகூலமாயிருக்கிறான்.

        கீதையில் மூழ்கி எழுந்தவனோ தன்னை மட்டுமின்றி, உலகத்தையே தூய்மைப் படுத்துகிறான். தனக்கு மட்டுமின்றி, தான் வாழும் சமுதாயத்துக்கே அனுகூலமாகிறான்.

                                           -தொடரும்

No comments:

Post a Comment