Friday 9 May 2014

நமது சிந்தனைக்கு இலக்கிய நூல்கள்

                        சில பெரிய மனிதர்கள் உதவி செய்ய முன்வரும்போது ஏதேனும் ஒரு சுயநலதைக் கருதியே உதவி செய்ய வருகின்றனர் அத்தகைய இழி செயலைக் காண்பித்து மேகத்தைப் போல் கைமாறு கருதாது கொடைவளம் புரிய வேண்டுமென விழைகிறார் ஆசிரியர். மேகத்திலிருந்து மழை பொழிகிறது மழை பொழிவதால் நாட்டில் வளம் பெருகின்றன அப்படி பல வளம் பெருக்க வழி செய்யும் மேகத்திற்கு நாம் ஏதேனும் செய்கிறோமா என்றால் அதுதானில்லை. அதுபோலதான் உதவி செய்ய வருபவரின் உள்ளமும் அமைந்திருக்க வேண்டுமென சொல்கிறது திரிகடுகம் என்னும் நூல்.

                                       பிறர் தன்னைப் பேணுங்கால் நானலும் பேணார்
                                       நிறன்வேறு கூறிப் பொறையும் - அறனைவியைக்
                                      காராண்மை போல வொழுகலும் இம் மூன்றும்
                                      ஊராண்மை யென்னுஞ் செருக்கு

- திரிகடுகம்

                     அக்காலத்தவர் பொருளை எண்ணியே செல்வமென்று சொல்லவில்லை அறத்திற்கேற்ப ஆன்ற செல்வத்தையே செல்வமாக போற்றுகின்றனர்."ஆக நாமும் அன்றாடம் இல்லை என்றாலும் அவ்வப்போது அந்த மேகமாவோமே."


ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment