Wednesday 7 May 2014

புத்தக கண்காட்சி

                     

                 நான் ஒரு புத்தக கண்காட்சிக்கு போனேன். எப்படியாவது மிக குறைந்த விலையில் ஒரு நல்ல புத்தகம் வாங்கிவிட வேண்டுமென்று. வரிசை வரிசையாக அழகாக அடிக்க வைக்கப்பட்டிருந்தது புத்தகங்கள் அத்தனை புத்தகங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும்போது உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி அழகான அட்டை படங்களோடு நமக்கு பிடித்த எழுத்தாளர் பெயர்கள் கண்ண கவர ஆவலோடு எடுத்து புத்தகத்தை புரட்டினேன் பிரமித்து போனேன் அதில் உள்ள விலையை பார்த்து.

                   அப்புறமென்ன அடுத்த புத்தகம் அடுத்த புத்தகம் என புரட்டி பார்த்ததில் நேரம் தான் கழிந்ததே தவிர புத்தகம் கிடைக்கவில்லை கடைசியில் வந்துவிட்டோமே என்று ஒரு புத்தகத்தை வாங்கி கொண்டு கண்களாலே ஒரு முறை ஆசை தீர பார்த்துவிட்டு வந்தேன். எனது பார்வையில் புத்தக கண்காட்சி வெறும் பார்வைக்காக வைக்கப்பட்டதாகவே தோன்றியது. புத்தம் இப்போதெல்லாம் யாரும் அதிகம் படிப்பதில்லை என்று வருத்தப்படுகிறோம்.
 
                   இந்த மாதிரி சூழ்நிலையில் புத்தகத்தின் விலை அதிகமானால் எப்படி வாங்குவார்கள்? புத்தகத்தின் விலை குறைந்தால் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எண்ணுகிறேன். அனேக இடங்களில் புத்தக கண்காட்சி வெறும் கண்காட்சியாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment