கூடா நட்பு கேடாய் முடியும் எப்படி தெரியுமா? நாம் வீதியில்
செல்கிறோம்!செல்கின்றபோது பலரைப் பார்க்கின்றோம் பழகுறோம் சிலரை நண்பராகவே
கொள்கிறோம் அவ்விதம் நட்பு கொள்ளும்போது ஆராய்ந்து பார்த்து நண்பரை கொள்வதில்லை
உடனே நம்பி பழகத் தொடங்கிவிடுகிறோம். இத்தகைய செயலால் தீமையே தோன்றுகின்றன என்கிறார் வள்ளுவர்
ஆராய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
எதையும் ஆராய்ந்து பார்க்காமல் நட்பு கொள்வோமானால் அதனுடைய இறுதி கட்டமானது சாவாகத்தான் இருக்குமெனக் கூறுகிறார்.
உண்மைதான் ! தேர்ந்தெடுக்காமல் நட்பு கொண்டு நலிந்து இருப்பவர்கள் இன்னும் தான் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையவர்களைக் கண்டாலும் நாம் திருந்த முன்வர வேண்டும்.
நன்றாகப் பேசுபவர்கள் அவர்கள் தம் பேச்சு சுவையாகவும் இருக்கும் ஆனால்முடிவென்னவென்று கருதுகிறீர்கள்? அந்த தேன் போன்ற சொல்லே நம்மை கொல்லாமல் கொன்றுவிடும் பழக வரும் எந்த மனிதனும் தூய உள்ளன் போடுதான் பழக வருகிறார்.
என்று தெரியாது. அதனால் கருத்துணர்ந்து கற்றறிந்தார் தம் நட்பைக் கொள்ளவேண்டும் அந்த நட்பு எங்ஙனம் வளருமென்றால் கரும்பின் நுனியிலிருந்துஅடிவரைத் தின்பதை யொத்ததாகும் ஏனெனில் கற்றவர் தம் நட்பானது முதன் முதலில் சற்று சுவைக்கும் வகையில் இருக்காது போகப் போகத்தான் இன்பம் பயக்கக் கூடியதாகும். தீயவர் நட்பு அத்தகையதல்ல! முதலில் கரும்பினது அடியிலிருந்து நுனியை நோக்கிச் செல்வதைப் போன்று இதனை புலமை மிக்க சமண புலவரொருவர் நாலடியாரில் கூறுகிறார் இப்படி
"கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே குருத்திற்(கு)
எதிர் செலுத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்
மதுரம் இலாளர் நட்பு"
- நாலடியார்
எல்லோரிடமும் நட்பு கொள்வது நல்லது தான் ஆனால் அது நல்ல நட்பாக இருக்க வேண்டும் போலித்தனமான ஆயிரம் நட்பை விட உண்மையான ஒரு நட்பு இருந்தால் போதும்.
ஸ்ரீசந்திரா
ஆராய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
எதையும் ஆராய்ந்து பார்க்காமல் நட்பு கொள்வோமானால் அதனுடைய இறுதி கட்டமானது சாவாகத்தான் இருக்குமெனக் கூறுகிறார்.
உண்மைதான் ! தேர்ந்தெடுக்காமல் நட்பு கொண்டு நலிந்து இருப்பவர்கள் இன்னும் தான் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையவர்களைக் கண்டாலும் நாம் திருந்த முன்வர வேண்டும்.
நன்றாகப் பேசுபவர்கள் அவர்கள் தம் பேச்சு சுவையாகவும் இருக்கும் ஆனால்முடிவென்னவென்று கருதுகிறீர்கள்? அந்த தேன் போன்ற சொல்லே நம்மை கொல்லாமல் கொன்றுவிடும் பழக வரும் எந்த மனிதனும் தூய உள்ளன் போடுதான் பழக வருகிறார்.
என்று தெரியாது. அதனால் கருத்துணர்ந்து கற்றறிந்தார் தம் நட்பைக் கொள்ளவேண்டும் அந்த நட்பு எங்ஙனம் வளருமென்றால் கரும்பின் நுனியிலிருந்துஅடிவரைத் தின்பதை யொத்ததாகும் ஏனெனில் கற்றவர் தம் நட்பானது முதன் முதலில் சற்று சுவைக்கும் வகையில் இருக்காது போகப் போகத்தான் இன்பம் பயக்கக் கூடியதாகும். தீயவர் நட்பு அத்தகையதல்ல! முதலில் கரும்பினது அடியிலிருந்து நுனியை நோக்கிச் செல்வதைப் போன்று இதனை புலமை மிக்க சமண புலவரொருவர் நாலடியாரில் கூறுகிறார் இப்படி
"கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே குருத்திற்(கு)
எதிர் செலுத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்
மதுரம் இலாளர் நட்பு"
- நாலடியார்
எல்லோரிடமும் நட்பு கொள்வது நல்லது தான் ஆனால் அது நல்ல நட்பாக இருக்க வேண்டும் போலித்தனமான ஆயிரம் நட்பை விட உண்மையான ஒரு நட்பு இருந்தால் போதும்.
ஸ்ரீசந்திரா
No comments:
Post a Comment