Saturday 31 May 2014

மனிதர்களின் அன்பு எப்படிப்பட்டது தெரியுமா?

          தினமும் ஒரு மரத்தின் நிழலில் எல்லோரும் இளைப்பாரி சென்றார்களாம். அந்த மரத்திற்கு ஒரே சந்தோஷம் நாம் எல்லோருக்கும் நிழல் தருகிறோம் என்று. ஒரு நாள் அந்த மரத்திற்கு ஆயுள் முடிந்தது அப்போது அந்த மரம் வருத்தப்பட்டது "அய்யோ நாம் போய்விட்டால் அவர்களுக்கு நிழல் தர முடியாதே" என்று ஆனால் அதில் இளைப்பாரிய மனிதர்களுக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லையாம் வேறொரு மரத்தை நோக்கி சென்றார்களாம். அப்போதுதான் அந்த மரம் உணர்ந்ததாம் "நாம் வெறும் சாலையோர மரம், நிழல் தருவதற்கு மட்டும்தான் உரிமை கொள்வதற்கு அல்ல" என்று. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று இதைதான் சொன்னார்களோ..?

                      நானும் சாலையோர மரம்தானோ..? உன் நினைவுகளை சருகுகளாக உதிர்க்கிறேன் ஆனால் அது எனக்குள்ளே குப்பையாகி மடிந்து கிடக்கிறது. என் உணர்வுகளை கொன்றாலும் எனக்கு உரமாக இருக்கிறாய் மீண்டும் அதிலிருந்து தலைவிருச்சமாக எழுவேன் என்றாவது ஒருநாள் நீ இளைப்பார வருவாய் என்ற நம்பிக்கையில்..! "அன்பை கொடு அன்பை பெறு"

No comments:

Post a Comment