Tuesday 20 May 2014

மனித மனங்களும் அவர் குணங்களும்

                            நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி பார்த்தவுடனே பேசிய உடனே அவர்களைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். சிலர் எத்தனையோ வருடம் தொடர்பில் இருப்பார்கள் நேரில் பார்த்திருப்பார்கள் ஆனால் ஒரு 10 நிமிஷம் சேர்ந்த மாதிரி பேச தயங்குவார்கள் யோசிப்பார்கள் அவர்களை புரிந்துகொள்ளவே பல வருடங்கள் ஆகிறது அப்படி இருக்கும் போது ஒரு சிலர் ஒரு ஹாய் ஒரு ஹலோ சொன்ன மறு நிமிடமே முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் கிடைக்காத பட்சத்தில் வருத்தப்படுகிறார்கள். 

                          நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் உங்கள் அன்பை, பாசத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது அவர்களின் துரதிஷ்டம் அதற்காக நீங்கள் 
வருத்தப்படாதீர்கள் நீங்கள் எப்படி ஒருவரின் அன்பிற்காக பாசத்திற்காக 
துரத்துகின்றீர்களோ அதே போல் அவர் வேற ஒருவரின் அன்பிற்காக யாரையோ 
துரத்திக்கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்படி ஒருவரின் நட்பை பெற நினைக்கின்றீர்களோ அதே போல் உங்களிம் உங்கள் நட்பை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.

                          நாம் எப்போதுமே கிடைக்காத ஒன்றுக்கு தான் ஆசைப்படுவோம் இப்படிதான் நாம் ஒருவரை ஒருவர் புரியாமல் அவரின் குணங்களை 
அறியாமலே போகிறோம். ஒன்றை நாம் இழந்தால் மிகப்பெரிய ஒன்று நமக்காக 
காத்திருக்கிறது அல்லது பெறபோகிறோம் என்று அர்த்தம். வாழ்க்கை என்பது 
கடிகாரமுள் மாதிரி ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டே இருக்கிறது இதை புரிந்து 
கொண்டவர்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. 

                         நல்ல எண்ணங்கள் கொண்டவன் ஞானி, எண்ணங்கள் உணர்ச்சிவயப்படும்போது, ஆசை, சினம், கடமை, உயர்வு, தாழ்வுமனப்பான்மை, வஞ்சம் என மனிதனை பல்வேறு குணங்கள் கொண்டவனாக்குகிறது அந்த குணங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவன் நாளடைவில் ஞானியாவன் வைக்கத்தெரியாதவன் சராசரி மனிதருக்கும் கீழான நிலைக்குப் போவான். 

ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment