Monday 19 May 2014

பக்தி மார்க்கத்தில் மகான்கள் அன்றும் இன்றும்

           அன்று அப்பர் சுந்தரர் திருஞானசம்மந்தர் மாணிக்கவாசகர் போன்றவர்கள் கடவுள் வாழ்த்துக்களையும் தேவார பதிகங்களையும் திருமறைகளையும் தொகுத்து கடவுளுக்கு பாமாலை சூடி மகிழ்ந்தார்கள் ஊர் ஊராக சென்று பக்தி நெறியை வளர்த்தார்கள்
.
        தனக்கென்று சொத்து சேர்க்காமல் ஏழை எளியோருக்கு உணவளித்தார்கள் எளிமையாகவாழ்ந்தார்கள் சிறு குடிசைதான் அவர்களின் இருப்பிடமாக இருந்தது சன்னியாசவாழ்க்கை வாழ்வதற்கு சொத்து தேவையில்லை என்று வாழ்ந்தார்கள் மாட மாளிகைஇல்லை, நீராட நீச்சல் குளமில்லை, கடவுளை தரிசிக்க ஏசி கார்களைபயன்படுத்தவில்லை காலார நடந்து கடவுளை தரிசித்தார்கள் இவர்கள் அல்லவாதெய்வமாந்தர்கள் இவர்கள் அல்லவா பக்திமான்கள்.

                    இன்றும் இருக்கிறார்கள் பக்திமான்கள் கோடி கோடியாய் பணம் குவிகிறது மாடமாளிகை இருக்கிறது அறுசுவை உணவு கிடைக்கிறது. ஏசி கார் இருக்கிறதுஎனக்கொரு சந்தேகம் இவர்கள் கடவுளை தரிசிக்க ஊர் ஊராக சென்றதுண்டா? அல்லதுகடவுளைப் பற்றி பிரசங்கம் செய்யும் இவர்களுக்கு ஒரு பதிகங்களாவது முழுமையாகதெரியுமா? அல்லது கடவுளைப் பற்றி ஒரு செய்யுளாவது இயற்ற முடியுமா? தன்னைகுரு என்று காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு அந்த கடவுள் அந்த ஞானத்தைவழங்காமல் போனது ஏன்?

             கடவுளின் பெயரை சொல்லி சம்பாதித்து அரண்மனை போன்று வீடுகளை கட்டி சுகபோகவாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் மெடிக்கல் காலேஜ்களை கட்டி பணம்சம்பாதிக்க கடவுள் இவர்களுக்கு போதித்தாரா? படித்த மக்கள் தேன் தடவியவார்த்தைகளில் மயங்கி தன்னிடம் இருக்கும் பணத்தை சாதாரண மனிதனின் காலடியில்கொட்டுகிறார்கள். தன்னிடம் கையேந்தி நிற்கும் ஒருவனுக்கு ஒருவேளை பசியை போக்க முடியாதநாம் யாரோ ஒருவன் சுகமாக வாழ பணத்தை வாரி இறைக்கிறோம்.

            கடவுள் போல் தன்னை காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு இந்த சொத்துக்கள் எதற்கு?இதை நாம் யோசிக்க வேண்டாமா? மாயஜால வார்த்தைக்கு கட்டுப்பட்டு தானும்கெட்டது இல்லாமல் மற்றவர்களை கோர்த்து விடும் மக்களை என்னவென்று சொல்வது.பேச்சு திறமையுள்ள ஒரு மேடை பேச்சாளன் செய்கின்ற வேலைகளைதான் இந்தபக்திமான்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.

         அந்த மடங்களுக்கு யாரும் சும்மா சென்று அந்த குருவின் சொற்பொழிவை கேட்டுவிடமுடியுமா? அங்கே செல்பவர்கள் அனைவருமே பணம் படைத்தவர்கள்தான் அவர்கள்தரும் சீறுடைக்கு பணம், அவர்கள் தரும் ஜீஸ்களுக்கு பணம், தங்குவதற்கு பணம்ஒரு கடவுளின் தொண்டன் இப்படி தான் பணம் பிடுங்குவார்களா என்ன?

                    நாம் ஒரு தவறு செய்கிறோம் அல்லது நேர்மையானவனாக இல்லை இது போன்றசூழ்நிலையில் மன உலச்சல் அடைவோம் மனம் அலைபாயும் அப்போது ஒரு ஆறுதலைதேடுவோம் அல்லது மனநல மருத்துவரை நாடுவோம் நீங்கள் இது போன்ற மடங்களுக்குபோவதும் மனநல மருத்துவரை சந்திப்பதும் ஒன்றுதான்.

               நீங்கள் நேர்மையானவரா? மனம் தூய்மையானவரா? யாருக்கும் தீங்கும் செய்யாதவரா?ஏழை எளியவர் நாலு பேருக்கு உதவி செய்பவரா? நீங்கள் இது போன்ற மடங்களுக்குசெல்ல தேவையில்லை. உங்களால் முடிந்த உதவிகளை கஷ்டபடுவர்களுக்குசெய்யுங்கள் நீங்கள் அவர்களுக்கு கடவுளாக தெரிவீர்கள் நல்லா இருக்கவேண்டும்மனதார வாழ்த்துவார்கள் அதை கடவுள் வாழ்த்தியதாக நினைத்துக்கொள்ளுங்கள் ஒருமனநிறைவு கிடைக்கும் அதே சந்தோஷத்தோடு கடவுளை காண ஆலயம் செல்லுங்கள்
கர்வத்தோடும் பெருமையோடும் கடவுள் முன் கண்ணீர் மல்க நில்லுங்கள்
தவறில்லை.

                      என் மனம் சுத்தமாக இருக்கிறது நாலு பேருக்கு உன் புண்ணியத்தில் நான் நல்லதுசெய்தேன் அதற்கு பங்கம் வரமால் பார்த்துக்கோ என்று சொல்லுங்கள் கடவுள் உன்நேர்மைக்கு உன் பக்திக்கு உன் அன்புக்கு கட்டுப்பட்டு உன் நெஞ்சிலேகுடியிருப்பார் நீ செய்கின்ற நல்ல செயலில்தான் கடவுள் இருக்கிறார் அது புரியாமல் நீ எங்கோ ஓடுகிறாய்.எதையோ தேடுகிறாய். நீங்கள் நல்லது செய்யுங்கள் இது போன்ற மடங்களுக்கு
செல்லும் எண்ணம் உங்களுக்கு வராது. கடவுளை மட்டும் வணங்குங்கள் கடவுள்பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் அற்பர்களை நாடி செல்லாதீர்கள்.

                  நல்ல விஷயங்களை நாம் ஏற்பதும் இல்லை நம்புவதும் இல்லை நம் கண்ணுக்குதெரிவதும் இல்லை. இதை படிப்பவர்கள் இதிலிருக்கும் உண்மையை உணர்ந்து ஆழ்ந்துயோசித்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நான்..!

#ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment