Monday 19 May 2014

இலங்கை வானொலியின் கலை பொக்கிஷம் அறிவிப்பாளர் நாகபூஷணி





                     வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர், விளம்பர நடிகை என்ற பன்முகங்களை கொண்டவர்.

                          இவர் நாவலர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரமும் யாழ் பல்கலைகழகத்தில் தமிழ் சிறப்பு கலைமாணி பெற்று கொழும்பு பல்கலைகழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் முடித்திருக்கிறார்.

                        சின்னஞ்சிறு வயது முதல் வாசிப்பில் நிறைய ஆர்வம் கொண்ட இவர். பத்திரிக்கை, வானொலி, என்பவற்றுக்கு கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எழுதி பின்பு அதன் தொகுப்பாக 'நெற்றிக்கண்' என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

                        இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இலங்கை நேயர்களையும் இந்திய நேயர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர். தன் குயில் போன்ற குரல் இனிமையால் நேயர்களை கட்டி போட்டவர்.பழகுவதற்கு இனிமையும், எளிமையும் நிறைந்தவர்.

                     இவர் பெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது, சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது, அதுமட்டுமல்லாமல் சார்க் மாநாட்டுக்கு ஆரம்ப அறிவிப்பாளராகவும், அணிசேரா நாடுகளின் மாநாட்டு அறிவிப்பாளராகவும் பங்குகொண்டு இருக்கிறார். மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2 ம் பரிசும் பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment