தினமும் இந்த வாழ்க்கையை
நினைத்து அழுது புலம்பி
என்னடா வாழ்க்கை இது
என விட்டத்தைப் பார்த்து
யோசிக்கும்போது
இந்த உலகம் புதிதாக தெரிகிறது..!
ஒவ்வொரு இரவும்
கனத்த இதயத்தோடு
புரண்டு படுக்கையில்
கண்ணோரம் கரைபுரண்டு ஓடி
காதை நனைக்கிறது
சூடான கண்ணீர்..!
அப்போது தவறாமல்
நினைவுக்கு வந்து போகிறது
எந்த வெள்ளத்திற்கும்
எதிர்த்து நிற்கும் நாணலும்
நெருப்பு என்று தெரிந்தும்
ஒரு முறையாவது
தொட்டுவிட வேண்டுமென்று
நெருங்கத் துடிக்கும்
விட்டில் பூச்சியும்..!
இப்போது தன்னையும் மீறி
தன்னம்பிக்கையோடு
கண்ணீரைத் துடைக்கிறது
கைகள் சாதிக்கவேண்டுமென்ற
எண்ணத்தோடு..!
No comments:
Post a Comment